இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெண்களின் ஊடக புரட்சி!
பெண்களின் ஊடகப் புரட்சி
இந்தியாவின் முதல் முழுமையான பெண் செய்தி அறை, ஒரு ஊடக புரட்சியை உருவாக்கியுள்ளது.
கபர் லஹரியா அல்லது வேவ்ஸ் ஒஃப் நியூஸ் (செய்தியின் அலை) என்ற இந்த ஊடகம், வட இந்தியாவில் உள்ள பெண்கள் மாத்திரமே இயக்கும் செய்தி அறையாகும்.
அதன் இணை நிறுவனரான கவிதா புந்தேல்கண்டி, தனது 12 வயதில் எழுதக் கற்றுக்கொண்டார்.
அவரது ஊழியர்கள் பலர் ஒதுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் குடும்ப துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையில் இருந்து தப்பியவர்களையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குழு பாரபட்சம் மற்றும் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட குடும்பமாகும்.
எனினும் சட்டவிரோத சுரங்கம், காட்டு கொள்ளையர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய விருது பெற்ற கதைகளை அவரது ஊடகம் உருவாக்கியுள்ளது.
உருவான கதை
கவிதா பண்டேல்கண்டியும் அவரது தோழியான மீரா தேவியும் எப்படி ஒரு புதிய செய்தி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை பிபிசியுடன் பகிர்ந்துள்ளனர்.
ஊடகம் என்பது ஆண்களின் ஆதிக்கத்திலேயே இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆரம்பத்தில் செய்திகளை சேகரிக்க சென்றபோது, பலரும் கேள்விகளை கேட்கத் தொடங்கினர்.
தம்மை அங்கீகரிக்கவில்லை. எனினும் இன்று தாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
