சிட்னியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பலியான இந்திய இளைஞர்
அவுஸ்திரேலியா - சிட்னியிலிருந்து குயின்ஸ்லாந்து சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கங்காருவுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,உயிரிழந்தவரின் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜு சிகாட்டி என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்வி கற்பதற்காக அவுஸ்திரேலியா வந்த ராஜு, 2020ம் ஆண்டு Master of networking கற்கைநெறியைப் பூர்த்தி செய்து விட்டு தற்காலிக விசாவுடன் சிட்னியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் குயின்ஸ்லாந்தின் புறநகர் பகுதியில் சிக்கிக்கொண்ட நண்பர்கள் சிலருக்கு உதவும் நோக்கில் ராஜு தனது நண்பர்களுடன் சென்றபோது, Carnarvon Highway-இல், St George அருகே கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியின் குறுக்காக வந்த கங்காரு ஒன்று காருடன் மோதுண்டதையடுத்து கட்டுப்பாட்டையிழந்த கார் அங்கிலிருந்த மரத்துடன் மோதியதில் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கங்காருவும் மரணமடைந்துள்ளது.
இதையடுத்து ராஜுவின் சடலத்தை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021