பிரகதிபுர பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்திய மாறுபாடு
டெல்டா என அழைக்கப்படும் கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு மாதிவலையில் உள்ள பிரகதிபுர பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளியின் மாதிரி சரியான மாறுபாட்டைக் கண்டறிவதற்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதேசத்தில் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.சம்பந்தப்பட்ட நோயாளி இந்திய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று சொல்ல முடியாது.
இது வேறு ஏதேனும் ஒரு மாறுபாடாக இருக்கலாம். இது இன்னும்
தீர்மானிக்கப்படவில்லை ஹெரத் கூறினார்.
முன்னதாக, இந்திய மாறுபாடு கொழும்பு தெமட்டகொட பகுதியில் இருந்து
கண்டறியப்பட்டது.