இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று(2) நடைபெற்றது.
இங்கிலாந்து அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி
இதனால் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 6 அன்று ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 9 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri