வெளிநாட்டில் விபத்தில் பலியான இந்திய மாணவி! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கடந்த ஜனவரி மாதம் பொலிஸாரின் ரோந்து வாகனம் மோதியதில் இந்திய வம்சாவளி மாணவி ஜானவி கந்துலா (வயது 23) பரிதாபமாக உயிரிழந்தார்.
சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சியாட்டில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட காணொளியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் பாதுகாப்பு உறுதி
இதன்போது விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி , குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும்,11 ஆயிரம் டொலர்களுக்கு செக் எழுதுமாறும் சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.
இந்த உரையாடல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதயத்தை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது என சியாட்டில் சமூக பொலிஸ் ஆணையம் (சிபிசி) தெரிவித்துள்ளது.
மக்கள் மதிக்கும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது.





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
