ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
இந்திய(India) தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பயணித்த ஏர் இந்தியா விமானமானது ரஷ்யாவின்(Russia) ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானமானது 225 பயணிகள்,19 விமான ஊழியர்கள் என மொத்தமாக 244 பேருடன் நேற்று பயணித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களில் ரஷ்ய வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது.

இதன்போது, எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் இதையறிந்த, விமானி உடனடியாக ரஷ்ய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ரஷ்யாவின் ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri