ஒரே நேரத்தில் பல இலட்சம் பேருக்கு உரையாற்றி உலக சாதனை (Video)
இந்தியாவில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு விரிவுரை நடத்திய விரிவுரையாளர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் பிரபல விரிவுரையாளர் பிரேம் ராவட் என்பவரே இவ்வாறு கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.
பிரேம் ராவட்டின் விரிவுரை
இவர் ஒரே நேரத்தில் 3,75603 பேருக்கு விரிவுரை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் புத்தகாயாவின் ஆவுரா கிராமத்தின் அன்னபூர்ணா அரிசி ஆலைக்கு அருகாமையில் அமைந்துள்ள ராஜ் வித்தியா கேந்தர் என்னும் இடத்தில் இந்த விரிவுரை நடத்தப்பட்டுள்ளது.
"உலகில் தன்னை தெரிந்து கொண்டு எவ்வாறு வாழ்வது" என்பது குறித்து இவர் விரிவுரை நடத்தியுள்ளார். மேலும் "அனைவரும் தங்களை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது எனவும், வெளியே நடப்பவற்றை விடவும் எமக்கு உள்ளே நடப்பவை மிகவும் முக்கியமானது" என பிரேம் ராவட் தனது விரிவுரையில் தெரிவித்துள்ளார்.
அவரது விரிவுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே,
வாழ்வில் அமைதி
"உங்கள் வாழ்க்கையில் முக்கியமானது நீங்கள் தான். உங்கள் வாழ்க்கையில் நீங்களே மிக முக்கியமான விடயம். வெளியே என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்.
அதற்கு நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் ஏற்றிய விளக்கால் மட்டுமே மற்றொரு விளக்கை ஏற்ற முடியும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கைத் தேடுங்கள். இந்த மூச்சு வருவதும் போவதும் அவருடைய வரம். அந்த தெய்வீகம் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கின்றது.

ஒவ்வொரு மூச்சையும் நீங்கள் பாராட்டத் தொடங்கும் போது, அந்த தெய்வீகத்தை அனுபவிக்கும் போது, உங்கள் வாழ்வில் அமைதியை உணர முடியும்.
அறியாமை குழப்பத்தை உருவாக்குகின்றது, அதேசமயம் அறிவு மனநிறைவையும் திருப்தியையும் உருவாக்குகின்றது.
சுயத்தைப் புரிந்துகொள்வதற்குப் பின்னால் உள்ள மற்றொரு முக்கிய நோக்கம் என்னவென்றால், வாழ்க்கையில் நாம் நம்மீது மட்டுமே, கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம், அதுவே நம் மகிழ்ச்சியையும் அமைதியையும் தீர்மானிக்கின்றது.
எல்லையற்ற சக்தி
எனவே, சுயத்தை அறிவது எமது வாழ்வின் எம்மை ஓட்டுநர் இருக்கையில் அமர வைக்கின்றது. நாம் கடவுளை நம்பினாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு யோசனை, கருத்து மற்றும் நம்பிக்கைகளுக்கு அப்பால், நமக்கு இந்த வாழ்க்கை இருக்கிறது.
நாம் இந்த பிரபஞ்சத்தில் கவனிக்கக் கூடிய விடயங்களை மாத்திரமே கவனிக்க முடியும், இந்த படைப்பு தெளிவாகின்றது. இயற்கையில் உள்ள அதே சக்தி தான் அனைத்தையும் உருவாக்கி நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.

அதன் எல்லையற்ற தன்மையை நம்மால் அறிய முடியாது, ஆனால் படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சுயத்தை நாம் புரிந்து கொண்டால் அது அந்த எல்லையற்றதைப் புரிந்துகொள்வதற்குச் சமம்.
அதற்கு அவர் ஒரு உதாரணமாக, “நாம் கடலை சுவைக்க விரும்பினால், அதன் முழு நீரையும் நம்மால் குடிக்க முடியாது, ஆனால் ஒரு துளியை சுவைப்பது கடலை முழுவதுமாக சுவைப்பதைப் போன்றது.
எல்லாவற்றையும் உருவாக்கி நிலைநிறுத்தும் அந்த எல்லையற்ற சக்தியின் அந்தத் துளியே நாம், எனவே அதை அறிந்து புரிந்துகொள்வதே மேன்மையான அறிவு" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri