ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்
இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabhaya Rajapaksha) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த முக்கிய சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நேற்று சந்தித்திருந்தார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
