இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(04) இந்த ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறுகிறது.
இலங்கையின் கடந்த ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு முதலில் பயணம் செய்யும் முறை பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான ஒரு நாள் பயணத்தின் போது பல இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
