தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலினிடம் இருந்து பறந்த கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம், தமிழக முதல்வரின் கடிதம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சர் முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள்.
கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடுமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஒன்றிய அரசு விரைந்து காண வேண்டுமென்றும் தமிழக முதல்வரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
