யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
எல்லை தாண்டி வந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (15.03.2024) அதிகாலை யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நாகபட்டினத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல்
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு
அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |