துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டியபோது நேற்று அதிகாலை 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், எஞ்சிய 11 கடற்றொழிலாளர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விளக்கமறியல் உத்தரவு
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் முன் முன்னிலைபடுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களில் இருவர் மீது துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று கூறி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
