அதி சக்திவாய்ந்த ஏவுகணை.. இந்திய பாதுகாப்புத்துறையின் துல்லியமான வெற்றி!
இந்தியாவின் அஸ்ட்ரா பிவிராம் (Astra BVRAAM) ஏவுகணை (Air-to-Air Missile) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பாதுகாப்பு மேம்பாட்டில் முக்கியமான ஒரு புதிய வெற்றியாக பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகியன இந்த சோதனை வெற்றியை உறுதிபடுத்தியுள்ளன.
கடந்த ஜூலை 11ஆம் திகதி அன்று, ஒடிசாவின் கடற்கரையை ஒட்டி Sukhoi-30 MK-I போர் விமானத்தில் இருந்து அஸ்ட்ரா ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
ஆளில்லா வான்வழி இலக்கு
சோதனையில், அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ள இந்த ஏவுகணை, துல்லியமான தாக்கத்தால் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது.
இந்த ஏவுகணையின் RF seeker (Radio Frequency), இலக்குகளை கண்டறிந்து தாக்குவதற்காக மிகவும் முக்கியமான ஒரு உதிரி பாகமாக உள்ளது. இது அதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.
குறிப்பாக இந்த ஏவுகணை, முழுமையாக DRDO-வால் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளமை மிகப்பாரிய அந்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு முக்கிய சாதனையாகும்.
100 கிலோமீற்றருக்கு மேல் பாயும் திறன் கொண்ட இந்த Astra BVRAAM ஏவுகணை, நவீன வழிநடத்தல் மற்றும் வழிகாட்டி (Guidance & Navigation) அமைப்புக்களை கொண்டுள்ளது.
இதில், DRDOவின் பல ஆய்வகங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இந்த வெற்றியை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் DRDO தலைவர் சமீர் வி. கமத் பாராட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
