படப்பிடிப்பிற்காக இலங்கை இந்திய நடிகர் மோகன்லால் கூறிய விடயம்
இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன்(Mohanlal) மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக இன்று(15) இலங்கை வந்துள்ளனர்.
"பேட்ரியட்" (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று (15) இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
மோஹன்லால்
இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.
இந்த மிக முக்கியமான திரைப்படத்தில் மோஹன்லால், மம்முட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ஜரின் ஷிஹாப் மற்றும் ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம்
இருவரும் இன்று காலை 11.20 மணிக்கு, இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா வந்தடைந்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் திரைப்பட சுற்றுலா பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள், இந்த நிகழ்வை விளம்பர நோக்கில் சிறப்பித்துப் பாராட்டுவதற்காக விமான நிலையத்தில் வரவேற்க வந்திருந்தனர்.
இந்தநிலையில், “இலங்கை படப்பிடிப்புக்கு மிக சிறந்த இடங்களை வழங்குகிறது. வேலை செய்ய மிகவும் நட்பான இடம்.
இலங்கைக்கு வருகை தருவதை நான் மிகவும் விரும்புகின்றேன். மேலும் எனது எதிர்காலத் திட்டங்களுக்கும் இங்கு படப்பிடிப்பைத் திட்டமிட்டு வருகிறேன்.
சினிமாவுக்கான புதிய அமைப்புகளுடன் கூடிய அழகான இடமாக இது இருக்கின்றது என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்ட படப்பிடிப்பை முடிக்க மோகன்லால் சுமார் 10 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன் இதற்கு முன்பு, முதலாவது கட்ட படப்பிடிப்புக்காக அவர் சுமார் ஆறு நாட்கள் இலங்கையில் இருந்தமை குறி்ப்பிடத்தக்கது.





தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
