இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம், 2025 முதல் 2035 வரையிலான "இந்தியா-அமெரிக்க முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மை" (US-India Major Defence Partnership) என்ற கட்டமைப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும், குறிப்பாக தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு இராணுவ பயிற்சிகள், தளவாடப் பகிர்வு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்திய பாதுகாப்பு
இந்த முடிவு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு அவர்கள் அடுத்த சந்திப்பில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு உடன்பட்டனர்.
அத்தோடு, இது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதலை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan