இந்திய -இலங்கை கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் இருந்து கடத்தல், மற்றும் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாட்டின் பொலிஸ்மா அதிபர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர் கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடியில் இன்று ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத கடத்தல்
கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மண்டபம் பகுதியிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு கடத்தவிருந்த போதைப்பொருட்கள், உரம், மஞ்சள் போன்றவற்றை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டவர்களை கைது செய்த பொலிஸாரை தாம் பாராட்டுவதாக தமிழக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 824 பேருக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகபட்டினத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பயிற்சியின் ஊடாக கடற்றொழிலாளர் ஒருவர், இந்திய கடற்படையில்
இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் தமிழக பொலிஸ் மா அதிபர்
தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam