இந்தியாவுடன் பகை தேடாதீர்! இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை- செய்திகளின் தொகுப்பு (Video)
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
பறிமுதல் செய்த இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடப்போவதாக ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,