S-400 ஏவுகணை அமைப்புக்களை ரஷ்யாவிடம் கோரும் இந்தியா
ரஷ்யாவின் தயாரிப்பான S-400 ஏவுகணை அமைப்புகளின் விநியோகத்தை விரைவுபடுத்த இந்தியா அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இந்திய பாதுகாப்பு செயலாளரின் மொஸ்கோ பயணத்தின்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா - ரஷ்யா இடையேயான ஆணையத்தின் (IRIGC-M&MTC) 21வது கூட்டத்தொடரையொட்டி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார்.
உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மைக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri