இந்திய குடியரசுத்தினத்தை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்!
இந்தியாவின் குடியரசு தினத்தில், வாகா எல்லையில், இந்திய- பாகிஸ்தானிய படையினர் இனிப்புக்களை பரிமாற்றிக் கொண்டனர்.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு நிகழ்வில் இன்று, தலைநகர் புதுடில்லியில் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றன.
இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச வாகா எல்லை பகுதியில் குடியரசு தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அப்போது எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதிகளிலேயே இரண்டு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.