இலங்கையில் உயர் தலைவர்களை சந்தித்த இந்திய இந்துமத ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்!
இந்திய முதலீடுகள்
இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியுடன் உயர் தொடர்பை கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் என்ற “ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்” அமைப்பின் உறுப்பினரான ராம் மாதவ் குறித்தும் செய்தித்தாள் கேள்வி எழுப்பியுள்ளது.
வட யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் உட்பட, துன்பப்படும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தமிழ்நாடு மாநில அரசாங்கம், பதினைந்து நாட்களுக்குள், இலங்கையின் கடற்பகுதியில் இழுவைப்படகுகளை அனுமதித்துள்ளது.
இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் திரும்பப்பெறுவது போன்றதாகும் என்று செய்தித்தாள் கூறியுள்ளது.
பிச்சை கேட்ட பசில்
கடந்த டிசம்பரில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, பிச்சை கேட்டு புதுடில்லிக்கு விஜயம் செய்த தினத்திலிருந்தே இந்தியாவின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் தாங்கி பண்ணைகள் மற்றும் கிழக்கு மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள எரிசக்தி திட்டங்கள் இதில் அடங்கும்.
அதானிகள், அம்பானிகள்
இப்போது அடுத்த கட்டம் வருகிறது; அதானிகள், டாடாக்கள் மற்றும் அம்பானிகள் போன்ற இந்திய வணிகத்தின் 'பெரிய மனிதர்களை' இலங்கையின் உள்ளூர் வணிக நிலப்பரப்பில் நிலைநிறுத்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காகவே ஆர்எஸ்எஸ் என்ற இந்துவாத அமைப்பின் நிர்வாகி இலங்கைக்கு வந்து சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக இந்திய செய்தித்தாள்களை இலங்கையின் ஆங்கில இதழ் கோடிட்டுள்ளது.
இந்த உயர்மட்ட நிர்வாகி, கொழும்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்ததாகவும், பசில் ராஜபக்சவுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக வரவுள்ளவரையும் சந்தித்து பேசியுள்ளார்.
யாழ்ப்பாண, மன்னார் தொழில்நுட்ப பூங்கா
இந்தநிலையில் அவரே யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பையும் ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது.
இவை அனைத்தும் முற்றிலும் கொழும்பில் உள்ள அரசியல் தலைவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, இந்தியாவின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலின் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதன் ஒரு பகுதியா? என்று ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு! - கௌதம் அதானி வெளியிட்ட தகவல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022