2035இல் இந்திய சீன யுத்தம்? ஆனால் அதற்கு முன்னர்…
அடுத்து வருகின்ற 50 ஆண்டுகளில் சீனா புரியஇருக்கின்ற 6 பிரதான யுத்தங்கள் பற்றி சீனாவின் அரச ஊடகமான China News Service பட்டியலிட்டிருந்தது.
அடுத்து வருகின்ற 50 வருடங்களில் சீனாவின் மக்கள் இராணுத்தினால் மேற்கொள்ளப்படும் என்று சீனாவினாலேயே கிட்டத்தட்ட உறுதிபடக் கூறப்பட்ட அந்த ஆறு யுத்தங்களில் இந்தியாவுடனான யுத்தமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் சீனா ஒரு யுத்தத்தை மேற்கொள்ளும் என்றும், 2035ம் ஆண்டு முதல் 2040ம் ஆண்டுக்கு இடையிலான காலப்பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அந்த யுத்தம் இடம்பெறலாம் என்றும் கணிப்பிடுகின்றார்கள் உலகப் போரியல் ஆய்வாளர்கள்.
எதிர்வுகூறப்படுகின்ற சீனாவின் அந்த 6 யுத்தங்களுக்காக சீனா மேற்கொண்டுவருகின்ற யுத்தத் தயாரிப்புக்கள் பற்றி வெளிவந்துள்ள சில இரகசியங்களைத் தேடுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: