இலங்கை பொலிஸாருக்கு ஹிந்தி மொழிப்பயிற்சி!
இலங்கையின் பொலிஸாருக்கு ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.
2022ஆம் ஜனவரி 10ஆம் திகதியன்று, இலங்கையின் காவல்துறையினருக்காக ஹிந்தி புலமை கற்கையை ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் 70க்கும் மேற்பட்ட காவல்துறை சிரேஸ்ட அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்றனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் முகமாக இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போது 10 பல்கலைக்கழகங்களிலும் 80 அரச பாடசாலைகளிலும் ஹிந்து கற்பிக்கப்படுவதாக இந்த நிகழ்வின்போது, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வினோட் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri