இலங்கை - இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் மாற்றம்
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 17ஆம் திகதி முதலே குறித்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் இந்தத் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செலுத்திய கட்டணம்
இந்நிலையில், பிற்போடப்பட்ட திகதியில் வேவையை ஆரம்பிப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதற்கமைய, 13/05/2024 முதல் 16/05/2024 பதிவு செய்த பயணிகள், 17/05/2024இல் இருந்தான சேவைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும், பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம்.
இல்லையெனில், செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், 'customer.care@sailindsri.com' என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam