சுதந்திர தின பேரணியில் மயங்கி விழுந்த மாணவர்கள்! முகம்சுழிக்க வைக்கும் இராஜாங்க அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளின் செயல்
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பாண்ட் இசை அணிவகுப்புக்காக வருகை தந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டமையால் 28 மாணவர்கள் உட்பட 31 பேர் மயங்கி விழுந்தனர்.
காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்போடு வவுனியா பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.
இந் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிகழ்வுகளும் அதிகமாக காணப்பட்டது, பாடசாலை மாணவர்களை மைதானத்தில் வெயிலின் மத்தியில் நிறுத்தி அனைத்து நிகழ்வுகளையும் நடத்தியதுடன் அதிதிகள் உட்பட அரச அதிகாரிகள் கொட்டகைகளுக்குள் வெயில் படாத வகையில் அமர்ந்து நிகழ்வுகளை பார்வையிட்டனர்.
இதன்போது சுமார் 28இற்கும் அதிகமான மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி அணியினர் முதலுதவி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் பாண்ட் இசைக்காக வந்திருந்த பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுவதை அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்ற போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் மேலும் பல மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பலரும் அதிதி மற்றும் அரச அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாட்டை கண்டு முகம் சுழித்தனர்.












தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
