இலங்கையில் டெங்கு மீண்டும் தாண்டவம்! - நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரையில் 58 வைத்திய அதிகாரி பிரிவுகள், அதிக ஆபத்தான வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது
கடந்த வருடத்தில், இந்தக் காலப்பகுதியில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், இந்த வருடத்தில் 40 ஆயிரத்து 998 நோயாளிகள் அதிகமாகப் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் 14 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவுகளில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மக்களைக் கோரியுள்ளது.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
