மாணவர்களிடம் அதிகரித்து வரும் பொருத்தமற்ற நடத்தை
Sri Lankan Schools
School Children
By Independent Writer
Courtesy: Sana

தற்போது உயர்தரம் கற்கும் மாணவர்களிடையே காணப்படும் சம்பிரதாயமாக பிறந்த தினங்கள் மற்றும் விசேட தினங்களில் சமைத்து உண்ணுகின்ற வழக்கம் காணப்படுகின்றது.
இது மாணவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளித்தாலும் மாணவர்களை பொருத்தமற்ற பாதைக்கு இட்டுச் செல்கிறது என பெற்றோர் ஒருவர் குறிப்பிடுகின்றார் .
மாணவர்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வீட்டில் பெற்றோரை நெருக்குகின்றனர்.
பொருட்களின் விலையேற்றமான இக்காலகட்டத்தில் பிள்ளைகள் பொறுப்பற்றவிதத்தில் செயற்படுகின்றனர் பெற்றோர் ஒருவர் தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.
சமூக யதார்த்தம்
பிள்ளைகள் சமூக யதார்த்தம் உணராது செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில், ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், “நண்பர் வட்டத்தில் ஒவ்வொருவரினதும் பிறந்தநாளிற்கான சமையலில் கலந்து கொள்வதால் கற்றலுக்கான நேரம் வீணடிக்கப்படுகிறது.

மாணவர்களின் மனநிலை கற்றல் சூழல் இருந்து வேறுபட்ட சூழல்நிலமைகளுக்கு மாற்றப்படுகின்றது.
இதனால் கற்றலில் பூரண ஈடுப்பாட்டுடன் செயற்படா நிலை காணப்படுகின்றது. மாணவர்கள் பெற்றோரின் பணத்தினை வீணாக்கும் நாகரீகமற்ற செயற்பாடாக காணப்படுகின்றது.
மதுபாவனை போன்ற தீயபழக்க உருவாக்க கூடிய வாய்ப்பாகவும் காணப்படுகின்றது.
வீட்டில் பெற்றோர் பணத்தினை வழங்காத சந்தர்ப்பத்தில் பெற்றோரின் காசு, நகை போன்றவற்றை திருடக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.எனவும் அடுத்து வரும் இளையவர்களுக்கு பொருத்தமற்ற முன்னுதாரணம் ” என குறிப்பிட்டிருந்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US