அதிகரிக்கும் பாடசாலை உபகரணங்களின் விலை! தடுமாறும் மாணவர்கள்
பாடசாலை அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணங்களினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2023ம் ஆண்டு கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என கல்வியலாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri