அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அஸ்வெசும மூலம் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டாம் கட்ட விண்ணப்பம் மார்ச் 15, 2024 அன்று முடிவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் விண்ணப்பத்தின் பலனைப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
7000 பேர் நீக்கம்
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொய்யான தகவல்களின் மூலம் நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |