கிராமிய பகுதிகளிலும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிப்பு
கிராமிய பகுதிகளிலும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிப்பு பதிவாகி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நகரப் பகுதிகளில் அதிகளவான கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வந்ததாகவும் தற்பொழுது அந்த நிலைமை கிராமிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை கடுமையான பின்பற்றுவதன் மூலம் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் மற்றுமொரு முடக்க நிலையை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் முடக்கங்கள் காரணமாக நாடு பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மற்றுமொரு முடக்கத்திற்கு செல்வது நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
