வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும், அதனைப் பொருட்படுத்தாமல் வர்த்தக நிலையங்கள் சில திறந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படுவதுடன் நடமாடும் வர்த்தகர்களும் ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வீதியில் செல்பவர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்கள் எனச் சிலர் முகக்கவசமின்றியும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதும் நடமாடுகின்றனர்.
வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன் வங்கிகளிலும் மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இதேவேளை இந்த நிலை தொடருமானால் வவுனியாவின் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.











அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
