இரண்டு மடங்காக அதிகரித்துள்ள சவபெட்டியின் விலை - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் இரட்டிப்பு மடங்காக அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்கள் தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒருவர் இறந்தால் அவரை வைத்து அடக்கம் செய்யும் சவபெட்டிகளின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
30000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின் விலை தற்போது 60000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
மேலும், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,



