மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் மன்னார் நகர்ப் பகுதியில் மக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இன்றையதினம் காலை தொடக்கம் சிலர் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும், அதே நேரம் பலர் அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் நகர்ப் பகுதிகளை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அதே நேரம் இன்றைய தினம் வங்கி நடவடிக்கைகளும் இடம் பெறுகின்ற நிலையில் மக்களின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போது மக்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கோவிட் தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நிலையை மதிக்காது செயல்படுவதுடன், அனுமதி பெறாத பல வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள் மக்களை அதிக அளவில் ஒன்று கூட்டி விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பயணங்களைத் தொடரவும், ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பாஸ் அனுமதி பெற்றுக் கொள்ள அதிகளவானவர்கள் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.








பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
