இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! மற்றுமொரு அறிவிப்பு வெளியானது
சந்தையில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சந்தைக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளமையால் மரக்கறிகளின் விலைகள் மீ்ண்டும் அதிகரிக்கும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்னறித்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நுவரெலியா பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு 60 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம பொருளாதார மையத்திற்கு இன்று 20 சதவீதமான மரக்கறிகளே கிடைத்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு, 15 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மெனிங் சந்தைக்கு 25 சதவீத மரக்கறிகளே கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன இல்லாதமை காரணமாக விவசாயிகளின் அறுவடைகள், பொருளாதார மையங்களுக்கு கிடைக்காமையினால், பண்டிகைக் காலத்தில், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
