இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாத இறுதியில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நிய கையிருப்பு , இந்த ஆண்டின் (2024) முதல் ஏழு மாதங்களில் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.
இதில் சீனாவின் மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களின் மொத்த வெளிநாட்டு கையிருப்பின் மூலம் ஈடுசெய்யக்கூடிய இறக்குமதியின் அளவு சுமார் 3.8 மாத இறக்குமதியாகும்.
கடந்த ஜூலை மாதம் உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர அந்நிய செலாவணியாக கொள்வனவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
