அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொரகொடவத்தை பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அழகு நிலைய உரிமையாளரும் அவரது உதவியாளர்களும், அழகு நிலையத்தை மூடிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
