உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது
தேங்காய் விலை திடீரென அதிகரித்துள்ளமை உணவுப்பொதியின் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணம் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
60 முதல் 80 ரூபாவாக இருந்த சாதாரண தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
கறி தயாரிப்பில் தேங்காய் பாலை பயன்படுத்துவது அத்தியாவசியமானது எனவும், தேங்காயின் விலை உயர்வால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை கால நெருக்கடி
இதுவொரு கடினமான சூழல் என்பதுடன், எதிர்வரும் பண்டிகை காலங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
