இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் இந்த வருடத்திற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின், தலைவர் உள்ளிட்ட பிரதானிகளுக்கு குறித்த தீர்மானம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவு அதிகரிப்பு
இதேவேளை 2025ஆம் ஆண்டு முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25 சதவீத கொடுப்பனவு அதிகரிப்பை தொடராதிருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)
இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு செலவினத்தை குறைக்கும் நோக்கில், கடந்த வருடங்களிலும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |