திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பதவியேற்பு
திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) ஜெயகௌரி ஸ்ரீபதி பதவியேற்றுள்ளார்.
இவர் இன்று (05) மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிறப்பான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை
தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார ,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பொறுப்பேற்ற நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்.
2014ல் இருந்து 2025 வரையான காலப்பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றை சேர்ந்தவராவார். இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் மூலமான சிறப்பான சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கடமையினை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.