வவுனியா மாவட்டத்தில் 55 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்
வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வுவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 84.62 வீதமானவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசிகளையும், 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
ஏனையவர்களும் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
