சுதந்திர தின வாழ்த்துச் செய்தியூடாக மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
மறுமலர்ச்சி யுகத்துக்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறு, இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வாழ்த்துச் செய்தி
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும்.
அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று நாம் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்துக்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம்.
நாம் தற்போது இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம்.
அழகான வாழ்க்கை
கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் ஓர் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும்.
அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தி அடைந்த நவீன இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.