போதையில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய மூன்று சந்தேகநபர்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 37 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பாலையூற்று பகுதியில் மதுபோதையில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயங்களுக்குள்ளான நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பாக உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய மூவரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
