வரி செலுத்துவோர் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
தனிநபர் வருமான வரி எல்லையை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாக மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்த வருட வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரி சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய திருத்தங்கள்
குறித்த பரிந்துரைக்கு சர்வதேச நாணய நிதியம் திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறைந்த வரி வருவாயை சேர்ந்தவர்களுக்கு அதிக சலுகைகள் அளிப்பது, நடுத்தர வர்க்கத்தினருக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குவது, அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு சற்று குறைவான சலுகைகள் அளிப்பது போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
