ஜனாதிபதித் தேர்தல் குறித்து சமல் ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.
எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
