போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் 11 நீதிமன்ற வழக்குகளுக்காக இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

போலி நாணயத்தாள்கள் புழக்கம்
இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு 15 போலி நாணயத் தாள்கள் என்ற உலகளாவிய சராசரி வீதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 57 ஆவது பிரிவின் கீழ், நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், போலி நாணயத் தாள்களைப் பின்பற்றுவது தொடர்பான தீர்க்கமான ஆதாரமாக மத்திய வங்கி 97 சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, புழக்கத்தில் உள்ள பணத்தின் தரத்தை பேணுவதற்காக போலி நாணயத்தாள்களை கண்டறிவது பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி இதுவரை பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு சுமார் 25 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 54 நிமிடங்கள் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
NEW குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்