உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் உள்ளடங்கியுள்ளது.
விண்ணப்பங்களை பெறல்
2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam