மோடி-ரணில் இடையே முக்கிய சந்திப்பு
இந்தியாவுக்கு(INDIA) விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் NXT கருத்தரங்கின் போது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முக்கிய சந்திப்பு
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளப் பதிவொன்றை இட்டுள்ளார்.
At the NXT Conclave, met my friend Mr. Ranil Wickremesinghe. I have always looked forward to our interactions and have admired his perspective on various issues. @RW_SRILANKA pic.twitter.com/blBNKMaDM4
— Narendra Modi (@narendramodi) March 1, 2025
அதில்"எனது நண்பர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தேன்.
எங்களுக்கிடையிலான தொடர்பாடல்களை எப்போதும் நான் விரும்புகின்றேன். பல்வேறு விடயங்கள் தொடர்பிலான அவரது கண்ணோட்டங்களை நான் மதிக்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் Cineulagam
