ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய அறிவிப்பு
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீர்ப்பாசன வசதிகள் போதியளவு இல்லாத காரணத்தினால், சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பகுதிகள் மற்றும் இடைப்பட்ட காலத்தில் மேலதிக பயிராக பாசிப்பயிறு பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தேவையான விதைகளை பெற்றுக் கொள்ள நிதி உதவியை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கமாறு ஜனாதிபதி விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri