இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! - ஜனவரி முதல் புதிய நடைமுறை
இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்டவர்கள் கோவிட்-19 பி.சி.ஆர் பரிசோதனையின் எதிர்மறை அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள், நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் எதிர்மறையான பரிசோதனை அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பயணிகள் கடந்த மூன்று மாதங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அறிகுறிகளை கொண்டிருந்தால் பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பதிலாக, அவர்கள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையின் எதிர்மறை அறிக்கையுடன் வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
நோயறிதல் அட்டை அல்லது சரிபார்க்கக்கூடிய சான்றுகள் அல்லது நேர்மறை பி.சி.ஆர் சோதனை அறிக்கை அல்லது நேர்மறை ரேபிட் ஆன்டிஜென் சோதனை அறிக்கை ஆகியவை நோயின் அறிகுறியின் ஆதாரமாக இருக்க வேண்டும்.
விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் இணையவழி சுகாதாரப் பிரகடனப் படிவத்தை தனித்தனியாகப் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை (தடுப்பூசிப் பதிவு, கோவிட்-19 பரிசோதனையின் முன் புறப்பாடு எதிர்மறை அறிக்கை, தரவுகள்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயணிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட QR குறியீட்டை (மொபைல் ஃபோன்/ஹார்ட் நகலில்) கொண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் ஜனவரி 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan