யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல்

Jaffna Government Of Sri Lanka Budget 2025
By Kajinthan Feb 14, 2025 06:43 AM GMT
Report

2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலானது, இன்று (14.02.2025) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கலந்து கொண்டோர் 

இதன்போது, நிலத்தடி நீர் மாசடைதல், கழிவுகள் மீட்டெடுத்தல், நன்னீர் குடிநீர் திட்டம், சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு, உள்ளூர் கடன், உற்பத்திகள், தேசிய அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைந்த கிராமிய சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

மேலும், பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், அனுமதியை பெற பிரதேச ஒருங்கிணைப்பு குழு இன்மையால் அதை நடைமுறைப்படுத்தும் அனுமதிக்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விடப்பட்டது.

இதன்போது அபிவிருத்திக்காக யாழ்ப்பாணத்துக்கு 56 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்களை புறந்தள்ளி அரச அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முயற்சி எடுத்ததாக கூறி கடும் எதிர்ப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி - கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்

சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி - கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்

நிதி ஒதுக்கீடு 

இதனையடுத்து சமர்ப்பிக்கப்பட முன்மொழிவு மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் சமர்பிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டது. குறிப்பாக 2025ஆம் ஆண்டின் வரவு - செலவு திட்டத்தின் முன்னரான முன்மொழிவின் கீழ் ஒதுக்கப்பட்ட 56 மில்லியன் நிதியை மாவட்ட செயலகம் ஊடாக கையாள்வது என்ற முன்மொழிவு வைக்கப்பட்ட போது அதை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவாதித்திருந்தார்.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் பிரதேச மட்டத்தில் எடுக்கப்படும் முன்மொழிவை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுத்தல் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறிப்பாக கடந்த 77 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் அவிருத்தி தொடர்பான திட்ட முன்மொழிவு பொறிமுறையை இம்முறை மாற்றி நடளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. குறிப்பாக கடந்த ஆட்சியில் இவ்வாறான ஒரு நிலை கொண்டு வரப்பட்டது.

மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

இணக்கப்பாடு 

ஆனால் அன்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவர் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லாதுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாத இந்த சமர்ப்பிப்பை ஏற்க முடியாது. இதை மாற்றியமைத்து நாடளுமன்ற உறுப்பினர்களது முன்மொழிவுகள் உள்ளடக்கபட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரது வலியுறுத்தலுக்கு இணங்கிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த 56 மில்லியன் நிதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாவட்டத்தில் ஒருவருக்கு 9 மில்லியன் நிதி ஒதுக்கப்படுள்ளதுடன் அதனடிப்படையில் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் எட்டப்பட்டது.

அதேவேளை, இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் வ.பவானந்தராஜா, பொ.ரஜீவன், இளங்குமரன், மேலதிக அரசாங்க காணி அதிபர் ஸ்ரீ மோகனன், திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரகுமார், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

எல்ல மலை உச்சியில் தீப்பரவல்! ஐம்பது ஏக்கர் எரிந்து நாசம்

எல்ல மலை உச்சியில் தீப்பரவல்! ஐம்பது ஏக்கர் எரிந்து நாசம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US