அதானி குழுமத்தின் எரிசக்தி திட்டத்தை செயற்படுத்த திட்டம்: கஞ்சன விஜேசேகர
இந்தியாவின் அதானி குழுமம் 2024 டிசம்பரில் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை செயற்படுத்த திட்டமிடுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் சர்தானா மற்றும் திட்ட நிர்வாக குழுவுடன், இது தொடர்பில் கலந்துரையாடியதாக கஞ்சன விஜேசேகரஎரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம்
குறித்த திட்டத்தை நிறைவு செய்வதற்கான சவால்கள், வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முதலீட்டு சபை, கடந்த பெப்ரவரியில் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டுக்கு 442 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
